தென் தமிழக பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0

அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் வறண்ட வானிலையாக காட்சியளிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 4 நாட்கள் குறித்த வானிலை நிலவரத்தையும் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

26.01.2021 முதல் 28.01.2021ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையாக நிலவும். மேலும் வரும் 29.01.2021 மற்றும் 30.01.2021 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திருமணம் – வைரலாகும் புகைப்படங்கள்!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மேலும் காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 32 மற்றும் குறைந்த பட்சமாக வெப்பநிலை 22 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை. மேலும் கடலுக்கு செல்வதற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here