இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் மீனாவின் அத்தை கிட்சனை அழுக்கு செய்து விடுகிறார். இதனால் அவர் மேல் உள்ள கோபத்தை முல்லை தனத்திடம் காட்டி விடுகிறார். மீனாவிடமும் தனது கோபத்தினை கொட்டி விடுகிறார். இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது.
மீனா அத்தை செய்து வாய்த்த காரியம்:
மீனாவின் அத்தை தான் அனைவருக்கும் சமையல் செய்கிறேன் என்று தெரிவிக்கிறார். இதனை அடுத்து முல்லையும் சரி என்று தெரிவித்து விடுகிறார். ஆனால், அவர் அனைவருக்கும் சமையல் செய்யாமல் கொஞ்சம் மட்டுமே செய்து விடுகிறார். அதே போல், கிட்சனை அலங்கோலப்படுத்தி விடுகிறார். இதனால் ஆத்திரத்தில் உச்சத்தில் முல்லை சென்று விடுகிறார். இந்த கோபத்தினை அவர் தனத்திடமும் காட்டி விடுகிறார். இதனை சரி செய்ய மீனாவிடம் நடந்ததை கூறுகின்றன.
உருமாறிய கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி – மாடர்னா நிறுவனம் அறிவிப்பு!!
மீனா முதலில் தனது அத்தைக்கு ஆதரவாக பேசியவர் பின் தனம் மற்றும் முல்லை தங்களது நிலையினை அழுத்தி கூறியதும் ஒன்னும் பேசாமல் சென்று விடுகிறார். இதனை அடுத்து முல்லை மற்றும் தனம் இருவரும் இரவு உணவு செய்ய ஆயத்தமாகின்றனர். மீனாவின் அத்தை வந்து சண்டை இடுகிறார். தனம் சமைக்க வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறி விடுகிறார். இதனால் கோபமாக வெளியே சென்று விடும் மீனாவின் அத்தை விறகு அடுப்பு வைத்து மீனாவிற்கு சமைக்க ஆரம்பிக்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மீனா எவ்வளவோ கூறியும் கேட்காத மீனாவின் அத்தை தான் சமையல் செய்வதில் உறுதியாக இருக்கிறார். இவர் விறகு அடுப்பு வைத்து சமையல் செய்வதை பார்க்கும் கண்ணன் தனது அண்ணி மற்றும் தாயிடம் கூறி விடுகிறார். தனம் கேட்க போகிறேன் என்று கூறியபோது, அவரது மாமியார் மறுத்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிந்து விடுகிறது.