‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட நடிகைக்கு இயக்குனருடன் திருமணம்!!

0

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் நடிகை நிரஞ்சனாவுக்கும் அதே படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் நடக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இயக்குனருடன் திருமணம்

கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார். கமர்சியல் திரைப்படமாக தயாரிக்கப்பட்ட படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது. இப்படத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்சன், கவுதம் வாசுதேவ் மேனன், நிரஞ்சனா ஆகியோர் நடித்திருந்தனர்.

சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திருமணம் – வைரலாகும் புகைப்படங்கள்!!

தற்போது இப்படத்தில் நடித்திருக்கும் நடிகை நிரஞ்சனா மற்றும் இப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக நிரஞ்சனா தரப்பிலிருந்து அவரது அக்கா கணவர் தகவலை பகிர்ந்துள்ளார். இது காதல் திருமணமா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

நடிகை நிரஞ்சனி இயக்குனர் அகத்தியரின் மூன்றாவது மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை விஜி மற்றும் விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ யின் போட்டியாளர் கனி ஆகியோரின் தங்கை தான் நிரஞ்சனா. திரைப்பட ஆடை வடிவமைப்பாளரான இவர் தேசிங்கு பெரியசாமியின் படத்தில் மட்டும் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here