தமிழக அமைச்சர் ஒருவருக்கு கொரோனா – சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!!

0

தமிழகத்தில் உணவுத்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் காமராஜ். இவருக்கு தற்போது கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே இவர் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா தொற்று:

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்கள் அனைவரையும் துன்புறுத்தி வந்தது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் கொரோனா வைரசால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டு தங்களது உயிரையும் இழந்துள்ளனர். அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சினிமா கலைஞர்கள் போன்றவர்கள் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.

அமைச்சருக்கு கொரோனா:

இதற்கு முன்பு கே.பி.அன்பழகன், துரைக்கண்ணு, செல்லூர் ராஜு, நிலோஃபர் கபீர், தங்கமணி போன்ற அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று இவர்கள் தற்போது குணமாகி தங்களது வீடு திரும்பியுள்ளனர். தற்போது இவர்களை தொடர்ந்து தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆரிக்கு எதிராக திரும்பும் போட்டியாளர்கள் – கொதித்தெழும் பிக் பாஸ் ரசிகர்கள்!!

அதனால் இவர் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடைசியாக சில தினங்களுக்கு முன்பு திருவாரூரில் நடந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் கலந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here