பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தான் ஆட்டம் சூடு பிடித்திருக்கிறது என்று கூட சொல்லலாம். காரணம், இப்போது பைனல் டிக்கெட்டிற்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றது. கூடுதலாக, இன்றைய ப்ரோமோவில் சோம் மற்றும் ரியோ இருவரும் பேசிக்கொள்கின்றனர், அதுவும் பாலாவை பற்றி பேசுகின்றனர்.
பிக் பாஸ் போட்டிகள்:
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சி தற்போது கடைசி கட்டத்திற்கு வந்து விட்டது. கடந்த வாரம் பிரீஸ் டாஸ்க் முடிந்து அனைவரும் தற்போது டிக்கெட் டு பைனல் டாஸ்கில் விளையாடி வருகின்றனர்.
தற்போது நிகழ்ச்சியில் சோம், ரியோ, ஆரி, பாலா, கேபி, ஷிவானி மற்றும் ரம்யா ஆகியோர் விளையாடுகின்றனர். முதல் ப்ரோமோவில் அனைவர்க்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகின்றது. அதில் ஒரு சக்கரம் வழங்கப்பட்டு அதனை கீழே விழ கூடாது என்று கூறப்படுகிறது.
தளபதி 65ல் நடிக்கப்போகும் கதாநாயகி – இணையத்தில் கசிந்த தகவல்!!
முதலில், ஆரி, கேபி, ரம்யா, ஷிவானி போன்றோர் தோற்றுவிடுகின்றனர். பின், கடைசியாக ரியோ, சோம் மற்றும் பாலா ஆகியோர் விளையாடுகின்றனர். அப்போது சோம் மாற்றி அந்த சக்கரத்தை பிடித்ததும், கேபி தனது ஆட்சபனையை தெரிவிக்கிறார்.
இதனால் கவனம் சிதறும் சோம் சக்கரத்தை விட்டு தோல்வி அடைந்து விடுகிறார். பின், கடைசி வரை ரியோ மற்றும் பாலா இருவரும் விளையாடுகின்றனர். கடைசியில் பாலாவும் தவறி விழ ரியோ ஜெயித்து விடுகிறார்.
அடுத்தடுத்த ப்ரோமோ:
இதற்கு அடுத்த ப்ரோமோவில், சோம் மற்றும் ரியோ இருவரும் பாலாவை பற்றி பேசுகின்றனர். அதில் சோம் பாலா நன்றாக தான் விளையாடுவதாக கூறுகிறார். அதனை ஆமோதித்து ரியோவும் பேசுகிறார்.
பின், சோம் பாலாவிடம் சில விஷயங்கள் தான் இருக்கிறது என்று கூறுகிறார். அதற்கு, ரியோ இல்லை அவர் ஆரம்பத்தில் நன்றாக விளையாடவில்லை என்றும் போட்டியின் பின்பாதியில் தான் விளையாடுகிறார் என்று கூறுகிறார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
பின், ஒரு டஸ்கில் சோம் மற்றும் ரியோ இருவரும் ஆரியை கடுமையாக தாக்குகின்றனர். வந்த நாளில் இருந்து ஆரி அனைவரையும் குறை மட்டுமே சொலிக்கிறார் என்று கூறுகின்றனர். அதே போல் ரியோவும் சொல்கிறார். இதற்கு எதிராக பேச வரும் ஆரியை இருவரும் பேசவிடாமல் தடுத்து விடுகின்றனர்.