மெஸ்ஸியையும் ரொனால்டோவையும் ஒப்பிட கூடாது…, ஓப்பனாக கூறிய துருக்கி அதிபர்!!

0
மெஸ்ஸியையும் ரொனால்டோவையும் ஒப்பிட கூடாது..., ஓப்பனாக கூறிய துருக்கி அதிபர்!!
மெஸ்ஸியையும் ரொனால்டோவையும் ஒப்பிட கூடாது..., ஓப்பனாக கூறிய துருக்கி அதிபர்!!

கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து தொடரில், பல சுவாரசியமான நிகழ்வுகளும், மறக்க முடியாத பல சம்பவங்களும் நடந்தேறியது. இந்த தொடரின் முதல் போட்டியிலேயே, தோல்வியை தழுவிய அர்ஜென்டினா அணி தான், இறுதியில் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும், ரசிகர்களிடேயே பெரும் எதிர்பார்ப்பு பெற்றிருந்த, நட்சத்திர வீரர்கள் உள்ள பிரேசில், போர்ச்சுகல் அணிகள் அரையிறுதியுடன் நாடு திரும்பியது சோகத்தில் ஆழ்த்தியது. இதில் குறிப்பாக, அரையிறுதி போட்டியில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோவை கடைசி நிமிடங்கள் மட்டுமே களமிறக்கியது, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இது குறித்து, துருக்கி அதிபர் ரிசப் தையிப் எர்துகான், அரசியல் ரீதியாக ரொனால்டோவுக்கு சதி நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின்…, தொடரும் ஆல் ரவுண்டரின் சாதனை!!

இதனை தொடர்ந்து, உலகின் தலை சிறந்த வீரரான ரொனால்டோவை, உலக கோப்பை போட்டியில், கடைசி 30 நிமிடங்கள் மட்டுமே விளையாடவிட்டது, அவரது மனநிலையை பெரிதும் பாதிக்க கூடியது என்று தெரிவித்துள்ளார். மேலும், அர்ஜென்டினா அணியின் கேப்டனான மெஸ்ஸியையும், ரொனால்டோவையும் ஒப்பிட கூடாது என்று கூறிய இவர், பாலஸ்தீன மக்களின் நலனுக்காக குரல் கொடுத்தவர் என்று பாராட்டி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here