லீக் ஒன் தொடரில் மெஸ்ஸியின் PSG அணியானது, ஆங்கர்ஸ் அணியை இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
PSG:
உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்று முடிந்த பிறகு, இடை நிறுத்தப்பட்ட பிரீமியர் லீக் தொடர்கள் பல்வேறு நாடுகளில் மீண்டும் தொடங்கப்பட்டது. அந்த வகையில், டிசம்பர் மாத இறுதியில் இருந்து, லீக் ஒன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இன்று பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) அணி ஆங்கர்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த போட்டியில், உலக கோப்பைக்கு பிறகு ஓய்வில் இருந்த நட்சத்திர வீரரான மெஸ்ஸி PSG அணி சார்பாக களமிறங்கினார். இதனால், ஆட்டமானது விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், ஆட்டம் தொடங்கிய 5 வது நிமிடத்திலேயே PSG அணியின் ஹ்யூகோ எகிடிகே அசத்தலான கோல் ஒன்றை அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதே நிலையே, ஆட்டத்தின் முதல் பாதி வரை தொடர்ந்ததால் PSG அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இந்தியாவில் களைகட்டிய உலக கோப்பை திருவிழா…, நாளை முதல் போட்டிகள் கோலாகல ஆரம்பம் !!
இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், மீண்டும் வேகம் காட்டிய PSG அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி 72 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம், PSG அணியானது, 2-0 என்ற கோல் கணக்கில் ஆங்கர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம், PSG அணியானது 47 புள்ளிகளுடன் 20 அணிகள் கொண்ட புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.