தற்கொலை எண்ணம் வருகிறது – மனம் திறந்த மீரா மிதுன்!!

0
9 மாசமா மன உளைச்சலில் இருக்கேன் - தற்கொலை பண்றது தான் முடிவு! கண்ணீர் விட்ட மீரா மிதுன்!!
9 மாசமா மன உளைச்சலில் இருக்கேன் - தற்கொலை பண்றது தான் முடிவு! கண்ணீர் விட்ட மீரா மிதுன்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் தான் மீரா மிதுன். தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு தற்கொலை செய்ய எண்ணம் வருகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான காரணத்தையும் பதிவிட்டு உள்ளார்.

மீரா மிதுன்:

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த மீரா மிதுன் தமிழ் சினிமாவில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த சில மாதங்களாக அவர் விமர்சனத்திற்கு உள்ளாகும் பல கருத்துக்களை தெரிவித்து வந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா உள்ளிட்டோர்களை தனது வாய்க்கு வந்த படி பேசி வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து மீரா மிதுனை சீண்டி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மீரா மிதுன் தான் தற்கொலை செய்ய போவதாக தெரிவித்து வந்தார். தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு தற்கொலை செய்ய எண்ணம் வருகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, எனக்கு மன அழுத்தம் உள்ளது. மேலும் தற்கொலை எண்ணமும் வருகிறது.

#INDvsENG 2வது டெஸ்ட் – இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்!!

இதனை நான் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். ஆனாலும் எனக்கு தொந்தரவு வந்த வண்ணமாக இருக்கிறது. நான் தற்கொலை செய்தால் அதற்கு காரணமான அனைவரையும் தூக்கில் போட வேண்டும். 3 வருடங்களுக்கு மேலாக என்னை சீண்டி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் வந்தால் மட்டுமே ரசிகர்களுடன் என்னால் பேச முடியும். இந்த வலியை நிறுத்த நான் சாக விரும்புகிறேன், என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த ட்வீட்டுக்கு பிரதமர் மோடியை டேக் செய்துள்ளார் மீரா மிதுன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here