இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் பேசி கொள்கின்றனர். ஹேமா சமையல் ஆர்டர் கொடுப்பதற்காக போனில் பேசிக்கொள்கின்றனர். அஞ்சலி மற்றும் அகில் தங்களது குழந்தை பற்றி மனம் திறந்து பேசிக்கொள்கின்றனர்.
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று கண்ணம்மாவை பார்க்க வீட்டு ஓனரின் மனைவி வருகிறார். தனது கணவர் அடித்த காயம் மறைய தனது குளிர் ஜுரம் வந்து விட்டது என்று கூறி விடுகிறார். இதனை அடுத்து ஹேமா கண்ணம்மாவிற்கு போன் செய்கிறார். அப்போது அதனை லட்சுமி எடுத்து பேசுகிறார். இருவரும் மிகவும் சந்தோசமாக பேசி கொள்கின்றனர். லட்சுமி ஹேமா வழங்கிய மிட்டாய்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். இதனால் ஹேமா மகிழ்ச்சி அடைந்து பேசுகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதற்கு பிறகு ஹேமா மற்றும் பாரதி பேசுகின்றனர். அப்போது ஹேமா முழுக்க முழுக்க கண்ணம்மாவை பற்றி பேசுகிறார். இதனால் பாரதி கண்ணம்மாவை பற்றி கேட்கிறார். ஹேமாவும் கண்ணம்மா தனது வகுப்பு தோழி இல்லை என்றும் கண்ணம்மாவுடன் பேசினால் தனது தாயிடம் பேசியது போல் உள்ளதாகவும் கூறுகிறார்.
அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் உற்சாகம்!!
அதே போல் கண்ணம்மாவிற்கு உதவியும் செய்யலாம் என்று தெரிவிக்கிறார். இதனால் ஹேமா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். இதனை தூரத்தில் இருந்து பார்க்கும் அஞ்சலி அகிலிடம் நீயும் இது போல் நமது குழந்தையை கொஞ்சுவாயா? என்று கேட்கிறார். இதனால் அதிர்ச்சி அடையும் அகில் எந்த அப்பாவது தனது குழந்தையை கொஞ்சாமல் இருப்பானா? என்று பதில் கேள்வி கேட்கிறார். பின் அஞ்சலி அகில் தன்னிடம் நடந்து கொள்ளும் விதம் வேறு மாதிரியாக இருந்ததால் தான் தான் அப்படி கேட்டதாக தெரிவிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைகிறது.