தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை அதிக அளவில் வீசுவதால் Fan, A/C உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க செல்லும் ஊழியர்கள் சிலர் மின் பயன்பாடு அளவை குறைத்து கணினியில் பதிவேற்றம் செய்வதாக புகார் வந்துள்ளது. மேலும் சில நேரங்களில் அலட்சியப்போக்கால் வீடுகளுக்கு மின் பயன்பாட்டை கணக்கிடாமல் இருப்பதாகவும் புகார் வந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் காரணமாக மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாலும், நுகர்வோர்களுக்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க படுவதாலும் கணக்கெடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து மேற்பார்வை பொறியாளர்களும், “கணக்கெடுப்பு பணியின் போது சோதனை மின் அளவீட்டினை பயன்படுத்துகிறீர்களா? என்பதை உறுதி வேண்டும்.” என மின்வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரி கே.மலர்விழி அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் மின் அளவீட்டின் படியே கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன்மூலம் முறைகேடுகளை தவிர்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.