வாழ்க்கையில் திருமணம் எனபது மிக முக்கியமான ஒன்றாகும். அதனால் தான் திருமணத்தை பெரியவர்கள் பார்த்து பார்த்து நடத்துவர். ஆனால் இக்காலத்தில் காதல் திருமணம் சகஜமாகி விட்டது. அதோடு விவாகரத்தும் அதிகமாகியுள்ளது. இதனால் தான் ஒரு முறைக்கு இரண்டு முறை ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைப்பர். இதில் எந்த பொருத்தம் முக்கியம் என பார்க்கலாம் வாங்க.
ஜாதக பொருத்தம்:
ஒரே மாதிரியான எண்ணங்களை கொண்டவர்கள் வாழ்க்கைத் துணையாக வரும்போது வாழ்க்கையில் சந்தோசத்திற்கு அளவில்லாமல் இருக்கும். ஆனால் விரைவில் சலித்து விடும். ஒரு சில விஷயங்களில் முன்பின் இருக்கும்போது தான் வாழ்க்கையில் சுவாரஸ்யம் ஏற்படும்.
இப்பொது உள்ள காலகட்டத்தில் காதல் திருமணம் என்பது சகஜமாகி விட்டது. ஜாதகத்தை பார்க்காமல் திருமணம் செய்துகொள்கின்றனர். சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக பொருத்தங்கள் ஒத்துப்போகின்றன. ஆனால் சிலருக்கு அது பிரிவினை தான் ஏற்படுத்தும். ஜாதகத்தில் 10 பொருத்தம் பார்ப்பதுண்டு. அதில் 9 பொருத்தங்கள் ஒத்துபோனாலும் முக்கியமான அந்த ஒரு பொருத்தம் இல்லாமல் போனாலும் திருமணம் செய்யக் கூடாது.
தினம், கணம், யோனி, ராசி, ராசி அதிபதி, ரஜ்ஜு, வேத, வசிய, மஹேந்திர, ஸ்திரி தீர்க்க பொருத்தம் இவைகள் தான் அந்த 10 பொருத்தங்கள். இவைகளில் முக்கியமானது ரஜ்ஜு பொருத்தம், வசிய பொருத்தம் மற்றும் ராசி பொருத்தமாகும். ரஜ்ஜு பொருத்தம் இல்லையெனில் கண்டிப்பாக திருமணம் செய்யக் கூடாது. இது கணவனின் ஆயுளை முடிவு செய்யும் பொருத்தமாகும்.
வசிய பொருத்தம் என்பது கணவன் மனைவி இடையே அன்பு & ஒற்றுமையை குறிக்கும். இந்த பொருத்தம் இல்லையெனினும் திருமணத்தை பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டும். இருவர் காதலிக்கும்போது அவர்களுக்கு மன பொருத்தம் தானாக அமைந்து விடுகிறது. அதனுடன் வசிய பொருத்தமும் அமைந்து விடுகிறது.