வேம்பூர் அருகே மீன் லாரியும், காரும் ஒரே நேராக வந்து மோதியதால் விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் பலியாகியுள்ள சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேராக வந்த கார்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார் பாளையத்தை சேர்ந்தவர், தேவநாதன். அவர் குடும்பத்தினருடன் காரில் விருத்தாசலம் மாவட்டத்தில் உள்ள கொளஞ்சியப்பர் ஆலயத்திற்கு சென்று உள்ளனர். 8 பேர் அந்த காரில் பயணித்துள்ளனர்.
உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது!!
அவர்கள் வேம்பூர் நெடுஞ்சாலை நோக்கிச்செல்லும் போது லாரி ஒன்றும் வந்துள்ளது. மீன் லாரிக்கு பக்கத்தில் ஒரு இரு சக்கர வாகனமும் வந்துள்ளது. அதில் இந்த லாரி மோதியது, பின் நிலை தடுமாறிய லாரி காரில் அப்படியே சாய்ந்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம்:
வாகனங்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாததால் மீன்லாரியும் காரும் நேருக்கு நேராக மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே நெய்வேலி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் லோகநாதன் பலியானார். அதே போல் தேவநாதன் குடும்பத்தை சேர்ந்த ரேவதி, பவானி, பரிமளா ஆகியோரும் பலியாகினர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
மற்றவர்கள் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமையில் கார் ஓட்டுநர் தேவா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். இப்படி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலியானது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.