தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்கள் நிறைய பேர் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் தோல்வி அடைந்து உள்ளதாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டு உள்ளனர்.
மாணவர்கள் தோல்வி:
தமிழகத்தில் ஜூன் 15 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை கொண்டு 80 சதவீதமும், வருகைப் பதிவேட்டினை கொண்டு 20 சதவீத மதிப்பெண்ணும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து இருந்தார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
ஜூன் 21 சர்வதேச யோகா தினம் – நாட்டு மக்களுக்கு மோடி கோரிக்கை…!
இந்நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை தற்போது வெளியிட்டு உள்ளனர். அரசுப் பள்ளிகளில் 50 சதவீத மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் தோல்வி அடைந்து இருப்பதாகவும், அதனை அடிப்படையாக வைத்து பொதுத்தேர்வு முடிவுகள் எப்படி அறிவிப்பது என அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.