இந்தியா சீனா இடையேயான பிரச்சனையில் விவாதிக்க பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில் சோனியா காந்தி , மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்கள்
அனைத்து கட்சி கூட்டம்
இந்தியா சீனா இடையில் நடைபெற்ற தாக்குதலில் இந்தியாவைசேர்ந்த ராணுவ வீரராகள் பலர் வீர மரணம் அடைந்தனர். இதனால் இந்தியாவில் சீனா பொருட்களை புறக்கணித்து வருகின்றனர். மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழிப்பு விடுத்துள்ளார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
காணொளி மூலம் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டமானது, இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் சோனியா காந்தி , மம்தா பாணர்ஜி, திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கபடுகிறது.
ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு – 18 பேருக்கு பரிசோதனை..!
இந்த கூட்டத்திற்கு ராஷ்டீரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு இல்லை என கூறப்படுகிறது. ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தேஜாஷ்வி யாதவ் தனது கட்சிஏன் அழைக்கப்படவில்லை என்று ஒரு டுவீட்டில் கேள்வி எழுப்பி உள்ளார்.