விஜய் டிவியில் மக்களுக்கு மிகவும் பிடித்த ரியாலிட்டி ஷோவாக விளங்கி வருவது தான் குக் வித் கோமாளி. இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த சீசன் பைனலிஸ்ட் முதல் போட்டியாளராக சூப்பர் சிங்கர் சிவாங்கி செலக்ட் ஆகியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் குக் வித் கோமாளி குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது குக் வித் கோமாளி சீசன் 4 ஆரம்பித்த இரண்டு வாரங்களில் கோமாளியாக மக்களை சிரிக்க வைத்து அதிரடியாக ஷோவை விட்டு வெளியேறியவர் தான் மணிமேகலை.
இந்த ஆளு என் புருஷனே இல்ல.., கட்டுன தாலிய கழட்டி எறிந்த பாக்கியா.., கோபி காத்திருக்கும் ஷாக்!!
இவர் வெளியேறியதை தொடர்ந்து அவர் எதற்காக திடீரென விலகினார் என்ற காரணம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. இது போல் அவர் விலகியதற்கு ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். இந்நிலையில் மணிமேகலை திரும்பவும் குக் வித் கோமாளி சீசன் 4ல் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. அப்ப விஜய் டிவி மீண்டும் டிஆர்பி எக்குத்தப்பா எகிறப்போகிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.a