தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் மாணவர்கள் அடுத்த கட்ட பணிகளில் தீவிரமாக இருந்து வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இருந்த நிலையில் விடுமுறை நாளை நீடித்தனர். அதன்படி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 14ம் தேதியிலும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதற்கிடையில் மாணவ மாணவியர்கள் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை பள்ளிகளில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி கல்வி நிலையங்களுக்கு அரசாங்கம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது சமீப காலமாக மாற்று திறனாளிகளிடம் கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
அட்ரா சக்க.., CWCல் மீண்டும் களமிறங்கும் மணிமேகலை.., அப்ப டிஆர்பி எக்குத்தப்பா எகிற போகுது போங்க!!!
அரசு மற்றும் அரசு சார்ந்த உயர் கல்வி நிலையங்களில் படிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது. அரசாங்க உத்தரவை மீறி கட்டணம் வசூலித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இதனை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.