நேற்று இரவு அதிக பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் மேற்குவங்கத்தை சேர்ந்த 14 பேர் பலியாகியுள்ளனர். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக 2.5 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.
சாலை விபத்து
மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த ஜல்பைகுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஒரு திருமணவிழாவில் கலந்துகொண்டு திரும்பி வருகின்ற வழியில் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு மேற்கு வங்கத்தில் அதிக பனிபொழிவின் காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கிறது. இந்த விபத்தில் 4 சிறுவர்களை உட்பட 14 பேர் இறந்துள்ளனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்தவர்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து மத்திய அரசு, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சமும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. தொடர்ந்து மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.