இந்த ஆண்டு திரையுலகம் பல உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. இயக்குனர்கள், நடிகர்கள் என தொடர் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது மலையாள சீரியல் நடிகரான சபரிநாத் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சபரிநாத்
சுஷாந்த் சிங் மரணம், கொரோனா காரணமாக கலைஞர் டிவியின் ஜெனரல் மேனேஜர் உயிரிழப்பு, கன்னட சீரியல் நடிகை தற்கொலை, வடிவேல் பாலாஜி என பல இழப்புகளை திரையுலகம் தொடர்ந்து சந்தித்து வருகிறது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இந்நிலையில் மலையாள சீரியல்களில் நடித்து வரும் சபரிநாத் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். 43 வயதான சபரிநாத் மின்னுகேட்டு, அமலா மற்றும் ஸ்வாமி ஐயப்பன் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது கூட ‘பாடாத பைங்கிளி’ என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எப்பொழுதும் போல இவர் தனது நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபரீதம் நடந்துள்ளது.
அப்பொழுது திடீரென நெஞ்சுவலி ஏற்படவே இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இது மலையாள திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலர் அவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.