Saturday, May 18, 2024

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் மரணம் – தலைவர்கள் அஞ்சலி!!

Must Read

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார்.

புதுச்சேரி தலைவர்;

நடிகர் கமல் ஹாசனின் கட்சி தான் “மக்கள் நீதி மய்யம்”. இந்த கட்சியின் புதுச்சேரி மாநில தலைவராக டாக்டர் சுப்பிரமணியன் பணியாற்றினார். இவர் 1985 ஆம் ஆண்டில் இருந்து 1990 வரை தி.மு.க கட்சியின் உருளையன்பேட்டை தொகுதிக்கு சட்டமற்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

பின், 2001 ஆண்டில் இருந்து அதே கட்சியில் முதலியார்பேட்டைக்கு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். அதன் பின், 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

priesdent subramaniyan
priesdent subramaniyan

அவர் புதுச்சேரி மாநிலத்தின் மாநில தலைவனராக செயல்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

ட்விட்டரில் இரங்கல்:

இவரது மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “நம்பிக்கை மொழி பேசும் அவரது நண்பரை இழந்து விட்டதாகவும் அவரது மறைவு தனக்கு ஒரு பேரிழப்பு” என்று வருந்தியுள்ளார்.

தேசியக் கொடியை அவமதித்த புகாரில் மனுதாக்கல்!!

இவரது மறைவிற்கு புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பல அமைச்சர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

நீண்டகாலமாக தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -