இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெறுவதற்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், பல்வேறு கட்சியினருடனும் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.23) செயற்குழு கூட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், “மக்களவை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது இதுவரை முடிவு செய்யவில்லை. கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, நான் போட்டியிடும் தொகுதி குறித்து விரைவில் அறிவிப்பேன்.” என கூறி உள்ளார். இருந்தாலும் இது தொடர்பான முடிவுகள், இன்றைய செயற்குழு கூட்ட முடிவில் தெரிய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக பள்ளி மாணவர்களே…, மீண்டும் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!