தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் சமீபத்தில் பொங்கல் விடுமுறையாக கடந்த ஜனவரி 13 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை அளிக்கப்பட்டது. இந்த பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜனவரி 18 ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு மீண்டும் தொடர் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, முருகப் பெருமானுக்கு உகந்த நாளான தை பூசம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக பள்ளிகளுக்கு தை பூசத்தன்று விடுமுறை அளிப்பது வழக்கம். இந்த முறையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி , தைப்பூசத்திற்கு மறுநாள் ஜனவரி 26 (வெள்ளிக்கிழமை) குடியரசு தினம் அரசின் பொது விடுமுறையாகும். இதனை தொடர்ந்து ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சனி மற்றும் ஞாயிறு என தொடர்ச்சியாக 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TRB தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதிர்ச்சி தகவல்…, இதெல்லாம் நடந்துருக்கா?? முழு விவரம் உள்ளே!!