தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் திறமையான ஆசிரியர்களை பணி அமர்த்துவதற்காக TRB பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இவ்வாறு, கடந்த 2017 ஆம் ஆண்டு உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட 500 மேற்பட்ட சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில், தேர்ச்சி பெற்ற சிலருக்கு மட்டுமே பணி வழங்கிய நிலையில், தமிழ் வழியில் பயின்ற சுமார் 229 பேருக்கு 6 ஆண்டுகள் ஆகியும் பணி நியமன ஆணை வழங்கவில்லை.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற சிலர் வயது மூப்பு காரணமாக, பணி நியமனம் பெறாமலேயே ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மன வேதனையுடன் தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.