ஒருவரின் வாழ்க்கையில் அதிகப்படியான மகிழ்ச்சி என்றால் அது காதலில் வெற்றி பெறுவது தான். ஒருவருக்கு அவரின் காதலே வாழ்கை துணையாக வந்தால் அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. எனவே ஒருவருக்கு அவர் விரும்பிய காதலை கைப்பிடிக்க சில எளிய பரிகாரங்களை சாஸ்திரம் சொல்லுகிறது.
காதல் கைகூட??
இந்த தலைமுறையில் காதல் திருமணம் சகஜம் ஆனாலும் ஒரு சில இடங்களில் காதலுக்கு தடை விதித்து கொண்டு தான் உள்ளனர். எனவே பலரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கின்றனர். இப்பொழுது பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் கைகூட என்ன பரிகாரங்கள் செய்வது என பார்க்கலாம். முதலில் ஒரு ஜோதிடரை அணுகி உங்கள் ஜாதகத்தை நன்கு அறிந்து கொள்ளுங்கள். உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி உள்ளது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
நீங்கள் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் 16 வாரங்கள் தொடர்ந்து திங்கட்கிழமையில் விரதம் இருந்து வர வேண்டும். திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாளாகும். எனவே சிவனை வழிபட்டு வந்தால் விரும்பிய கணவன் கிடைப்பான் என்பது ஐதீகம். சிவன் கோவிலுக்கு சென்று தேனுடன் அபிஷேகம் செய்வதால் சில நாட்களிலேயே விரும்பிய கணவர் கிடைப்பார்.
மேலும் துர்க்கை அம்மனை செவ்வாய் கிழமைகளில் வேண்டி சிவப்பு ஆடையை அம்மனுக்கு அணிவிக்க வேண்டும். இதனால் அம்பாள் உங்கள் மனதிற்கு பிடித்த வரனை அமைத்து தருவார். பிறகு ஒரு வெற்றிலையை எடுத்து உங்கள் காதலரின் பெயரை எழுதி அதனை தேனில் நனைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்கள் காதல் வலுப்படும். மேலும் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை காலையில் பாலபிஷேகம் செய்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 10 வாரங்கள் விரதமிருந்து செய்து வந்தால் உங்கள் காதல் கைகூடும்.