Friday, April 19, 2024

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை – இன்றைய வானிலை இது தான்!!

Must Read

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் கொடுக்கபடாததால் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம்.

பருவநிலை மாற்றம்:

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. மற்ற மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். அடுத்த 48 மணி நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

rain in tn
rain in tn

சென்னையை பொறுத்தவரை வானம் அடர்த்தியான மேகமூட்டத்துடன் காணப்படும். புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

வெப்பநிலை மற்றும் மழைப்பதிவு:

தமிழகத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அக்.1 முதல் பள்ளிகள் திறப்பு அரசாணை நிறுத்தி வைப்பு – முதல்வர் உத்தரவு!!

heavy rain in tn
heavy rain in tn

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை நகரிலும், சிதம்பரம் மாவட்டத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தவர்ச்சி பகுதியில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக கங்காவல்லி, குளித்தலை, வானமாதேவி பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கவில்லை. அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -