கலாச்சார நாடான இந்தியா கொரோனா தடை காலத்திற்கு பிறகு தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. பொருளாதார மந்த நிலையால் பல முன்னணி ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவ்வப்போது பதவி உயர்வு, வெளிநாட்டு சுற்றுப்பயணம் என சில ஐடி நிறுவனங்கள் சிறப்பித்து வருகின்றனர். இதை விட இப்போது UPயில் நொய்டாவின் ஐடி நிறுவனங்கள் மதுபானங்களை ஊழியர்களுக்கு வழங்க நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து தற்போது இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து உள்ளது. அதாவது நொய்டாவின் பெரு நகரங்களில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணி ஓய்வின் போது ஊழியர்கள் மற்றும் விசிட்டர்களுக்கு மதுபானங்களை வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் மகிழ்ச்சியில் ஐடி ஊழியர்கள் அரசுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.