டெல்லியில், சுல்தான்புரி பகுதியில் ஸ்கூட்டியில் வந்த 23 வயது இளம் பெண்ணை காரை வைத்து அடித்து தூக்கி, 4 கி மீ வரை சாலையில் இழுத்துச் சென்ற கொடூர இளைஞர்களை, போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீஸ் கைது:
டெல்லி சுல்தான் புரி பகுதியில், நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு, 4 இளைஞர்கள் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள், ஸ்கூட்டியில் வந்த, 23 வயது இளம்பெண்ணை விபத்துக்குள்ளாக்கி, 4 கிமீ வரை சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்தப் பெண்ணின் சடலத்தை, அந்த கார் இழுத்துச் சென்றதால், அவரின் உடல் சிதைக்கப்பட்டு, கால்கள் துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த மாவட்டத்தில் ஜனவரி 4ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!!!
இது குறித்து காவல்துறைக்கு கடிதம் எழுதிய டெல்லி மகளிர் ஆணையம், காவல்துறை இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது. உயிரிழந்த இளம் பெண்ணுக்கு, 4 சகோதரிகளும், 2 சகோதரர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொடூர சம்பவம், மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.