தமிழகத்தில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேருவதற்காக 7.5 இடஒதுக்கீடு தமிழக அரசு வழங்கியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது அரசு அறிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 இடஒதுக்கீடு:
கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. நடந்து முடிந்த அந்த தேர்வில் அரசு பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். நுழைவுத்தேர்வுக்கான தேர்வு முடிவு அக்டோபர் 16 ஆம் தேதி வெளி வந்த நிலையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வழங்கியது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற அனைத்து மாவட்டங்களிலுள்ள அரசு பள்ளி மாணவர்கள் வரும் 12 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்காக அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமும் ஒரு நீட் பயிற்சியாளர், தலைமை ஆசிரியர் தனிப்பட்ட குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு முதன்மை கல்வி அலுவலருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அனைத்து மாணவர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் படித்து இருந்தால் முன்பு படித்த பள்ளிகளிலும் தலைமை ஆசிரியரின் கையொப்பம் இருந்தால் மட்டுமே சான்று வழங்கப்படும் என்று கூறி மாணவர்களை அலைய வைக்கக்கூடாது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அரசு வழங்கிய சான்றுதலில் கண்டிப்பாக மாணவர்களின் பெயர், தந்தை பெயர்,எந்த வகுப்பில் இருந்து எந்த வகுப்பு வரை படித்தார் என்ற விவரம் அனைத்தையும் சரியாக இருக்க என்று சரிப்பார்த்து பின் தலைமை ஆசிரியரின் கையொப்பமும் இட வேண்டும் என தமிழக அரசு முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவித்துள்ளது.