பிக்பாஸ் போட்டியாளர் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமல்ஹாசனுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் பேச்சு:
மறைந்த முன்னாள் முதல்வர் M.G.ராமசந்திரனின் 104வது பிறந்த தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடந்த பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகை செல்வன் ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அரசியல் வருகை பற்றி பேசும்போது “தனது திருமண மண்டபத்திற்கு வாடகை பாக்கி வைத்திருந்த ரஜினிகாந்த் என்னை அரசியலுக்கு அழைக்காதீர்கள் என்று உடல்நிலையை காரணம் காட்டி விலகிக்கொண்டார்.
மொய்பணம் ‘கூகுள் பே’ & ‘போன் பே’யில் – கலக்கும் புதுமண தம்பதியின் ஐடியா!!
கமலுக்கோ பிக்பாஸ் போட்டியாளர்களான ஷிவானி, ரம்யா பாண்டியனுக்கு கிடைத்துள்ள ஓட்டுக்கள் கூட கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் பார்ப்பதற்கு நல்ல பெண் போல இருப்பதால் ரம்யாவுக்கு நானே 5 ஓட்டுக்கள் போட்டேன். அவர் பிழைத்தது போகட்டும் என்று இவ்வாறு செய்தேன். அரசியல் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியல்ல, மூன்று அல்லது நான்கு கோடி ஓட்டுக்கள் விழுவதற்கு” என்று கூறினார். மேலும் அவர் “உலக வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே நபர் TTV தினகரன் தான் ” என்றும் விமர்சித்து உள்ளார்.