மக்களால் அதிகளவு எதிர்பார்க்கபட்ட பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதி முடிவுகள் நேற்று இரவு வெளியானது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபல தனியார் டிவியின் வெற்றிகரமான நிகழ்ச்சியான பிக்பாஸின் இந்த சீஸனின் வெற்றியாளராக நடிகர் ஆரி அர்ஜுனன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் வெற்றியாளர்
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தொடர் பிக்பாஸ். விஜய் டிவியின் மொத்த ரேட்டிங்கிற்கும் சொந்தமான ஒரு முக்கியமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் இந்த சீசனின் வெற்றியாளராக நடிகர் ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது பிக்பாஸ் ஷோ. 16 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஷோ வைல்ட் கார்டு என்ட்ரியுடன் 18 போட்டியாளர்களுடன் களம் கண்டது. ஆரம்பத்தில் சண்டை சச்சரவுகளுடன் போட்டியாளர்கள் காணப்பட்டாலும் நாட்கள் வேகமெடுக்க நிகழ்ச்சி சுவாரசியமானது. இப்போட்டியின் இறுதியாளராக ஆரி, ரியோ, சோம், பாலாஜி மற்றும் ரம்யா ஆகியோர் இருந்தனர். இப்போட்டியின் இறுதி முடிவு நேற்று 6 மணிநேர ஷோவாக நடத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.
மொய்பணம் ‘கூகுள் பே’ & ‘போன் பே’யில் – கலக்கும் புதுமண தம்பதியின் ஐடியா!!
இந்நிகழ்ச்சியில் மக்களின் ஆதரவை பெற்று நடிகர் ஆரி வெற்றிபெற்றார். இதைத்தொடர்ந்து வெற்றியாளர் வரிசையில் பாலாஜி, ரியோ, ரம்யா அடுத்தபடியாக சோம் இடம்பெற்றிருந்தனர். நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3ன் வெற்றியாளர் முகேன் ராவ் இந்த சீசனின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.