சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் தரமான வில்லி கதாபாத்திரத்தில் இறங்கி நடிப்பவர் தான் நடிகை ராணி. இவர் பல வருடங்களாக ரசிகரின் மத்தியில் கவனத்தைப் பெற்று வந்த சந்திரலேகா சீரியலில் வில்லியாக நடித்து எக்கச்சக்க ரசிகர் பட்டாளத்தை தன் வசப்படுத்தி வந்தார். இதைத் தொடர்ந்து சன் டிவியின் மற்றொரு ப்ரைம் டைம் சீரியலான ‘ரோஜா’ சீரியலில் காவல் அதிகாரியாக இவர் நடித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில் இவர் சன் தொலைக்காட்சியின் ப்ரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் ‘இலக்கியா’ சீரியலில் பைரவி என்ற போல்டான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.மேலும் இந்த சீரியல் அக்டோபர் மாதம் திரைக்கு வந்த நிலையில் தற்போது இதன் நூறாவது எபிசோடை எட்டியுள்ளது. இதில் ஹீரோயினாக நடிக்கும் இலக்கியா ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து பணக்கார வீட்டில் மருமகளாக தன் வீட்டிற்கு வந்ததை பைரவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதனால் தனது மகன் கௌதமுக்கும் இலக்கியாவிற்கும் இடையே பிரச்சனைகளை ஏற்படுத்தி தரமான வில்லியாக களத்தில் நடித்து வருகிறார்.மேலும் இவரின் அசால்டான நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.இந்நிலையில் இவர் இவர் தனது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தரக்கூடிய ஒரு தகவல் கொடுத்துள்ளார். அதாவது இவர் இந்த் சீரியலில் இருந்து விலக போவதாகவும், இனி இவருக்கு பதிலாக ‘கண்ணான கண்ணே’ சீரியலில் வில்லியாக நடிக்கும் பிரியா இனி பைரவி கதாபாத்திரத்தில் தொடர போவதாக தகவல் கிடைத்துள்ளது.