இந்திய அணியானது, ஆகஸ்ட் மாதத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக டி20 தொடர்களில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி:
இந்திய அணியானது வரும் 9ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாட இருக்கிறது. 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் டிராபி வரும் மார்ச் 13ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனை தொடர்ந்து, இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரிலும் விளையாட இருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த தொடருக்கு பிறகு, இந்திய வீரர்கள், ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என அடுத்தடுத்து கவனம் செலுத்த உள்ளனர். எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த இறுதிப் போட்டியானது ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உலக டேபிள் டென்னிஸ் (WTT): சீன வீரர்களை வீழ்த்திய இந்திய வீரர்கள்…, அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!!
இதற்கு அடுத்த மாதத்தில் (ஜூலை) இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை விளையாட இருக்கிறது. இதற்கிடையில், அயர்லாந்து அணியானது, இந்திய அணிக்கு எதிராக ஆகஸ்ட் மாதத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.