சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மெட்ரோ சேவை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மெட்ரோ சேவைகளை விரிவுபடுத்த 5 வழித்தடங்களில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி சென்னையில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
எனவே அடையாறு ஆற்காடு என பல்வேறு முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் கூறுகையில், “தற்போது மெட்ரோ பணிகளுக்காக தூண்கள் எழுப்பப்பட்டு வருகிறது.
இதனால் சாலைகளில் உள்ள தடுப்புகளை தேவைக்கேற்ப விரிவுபடுத்தி மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஓராண்டுக்குள் இந்த தூண்கள் எழுப்பும் பணி முடிவடைந்து விடும். பின்னர் சாலைகளில் உள்ள தடுப்புகளின் அளவுகளும் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.