வனிதா பீட்டர் பால் பற்றிய விவகாரம் தற்போது அனைத்து வலைத்தளங்களிலும் பரவிக்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த பிரேக்கப் காரணத்தையும் பலரும் பல விதமாக கூறி வருகின்றனர். வனிதா மூன்றாவது திருமணத்தை எதிர்த்து பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது வனிதாவை மறைமுகமாக தாக்கி ட்வீட் செய்துள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணன்
லாக்டவுன் சமயத்தில் வனிதா தனது யூடூப் சேனளுக்கு உதவியாக இருந்த பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனை எதிர்த்து பலரும் குரல் கொடுத்தனர். பலரும் கண்டவாறு விமர்சித்தும் ட்ரோல் செய்தும் வந்தனர். இந்நிலையில் ரவீந்தர் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களும் வனிதாவிடம் நேரடியாகவே பேசினர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் சமூக வலைத்தளங்களில் பெரிய சண்டையே வெடித்தது. வனிதா அனைவரையும் கண்டபடி பேசி வந்தார். பீட்டர் பால் என்ற ஒருவருக்காக ஒட்டுமொத்தமாக அனைவரையும் எதிர்த்து நின்றார். இதில் அதிகமாக அசிங்கப்பட்டது லட்சுமி ராமகிருஷ்ணனும் அவரது கணவரும் தான். வனிதா இவர்களை நேரலையில் சரமாரியாக பேசி அசிங்கப்படுத்தினார்.
அவர்களை மட்டுமல்ல கஸ்தூரி, ரவீந்தர் என அனைவரையும் அசிங்கப்படுத்தினார். தற்போது பிரேக்கப் பிறகு எதுவும் நடக்காதது போல வீடியோவை வெளியிட்டு வருகிறார் வனிதா. பீட்டர் பால் மோசமானவர் என்று அனைவரும் எவ்வளவு கூறியும் கேட்காத வனிதா இப்பொழுது அழுது என்ன பிரயோஜனம் என்று பலரும் கேட்டு வந்தனர்.
இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் ட்வீட் ஒன்றை வெளியுட்டுள்ளார். அதில் அவர் மூன்று மாதத்திற்கு முன்னால் ஒரு படத்தை கற்றுக்கொண்டேன். பெரியார் கூற்றுப்படி “மானம் உள்ள ஆயிரம் பேரை, எதிர்த்து நின்று சண்டையிடலாம். மானம் இல்லாத ஒருத்தருடன் சண்டையிட்டால் நம் மானம் போய்விடும்” என்று கூறியுள்ளார். மூன்று மாதத்திற்கு முன்பு நடந்த விஷயம் என்றால் அது வனிதா திருமணம் தான். இதில் வனிதாவை பற்றி தான் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.