கொங்கு நாட்டு சிக்கன் கொழம்பு; இது எளிதானது மட்டுமல்ல, மிகவும் சுவையானதாக இருக்கும். இது ஒரு மசாலா சிக்கன் டிஷ், இது மிகவும் அருமையான சுவை கொண்டது. இது காரமான மற்றும் சுவையாக இருக்கும். நீங்கள் இதை இட்லி, தோசை, ரொட்டி அல்லது சாதம் கூட பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் – 1/2 கிலோ
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 2 (நறுக்கியது)
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
- கொத்தமல்லி – சிறிது
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு:
- சின்ன வெங்காயம் – 5-6
- வரமிளகாய் – 6-7
- மிளகு – 1 டீஸ்பூன்
- சோம்பு – 1/2 டீஸ்பூன்
- கசகசா – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- துருவிய தேங்காய் – 1 டேபிள்
- ஸ்பூன் மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு:
- கிராம்பு – 3-4
- பட்டை – 1 இன்ச்
- சோம்பு – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, பின் அதில் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் சின்ன வெங்காயம், வரமிளகாய், மிளகு, சோம்பு , கசகசா , சீரகம், துருவிய தேங்காய், அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும். இறுதியில் மல்லித் தூளை சேர்த்து பிரட்டி இறக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால்,