அனைத்து மாநிலங்களிலும் மக்கள் அனைவரும் தடுப்பூசியை கட்டாய முறையில் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கொரோனா கடுப்பூசியை செலுத்தியுள்ளார்.
ரஜினிகாந்த்:
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினி தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததன் காரணமாக அவர் மீண்டும் சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னைக்கு திரும்பிய அவரை அவரது மனைவி ஆரத்தி எடுத்து வரவேற்றார். தற்போது தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் வீரியம் அதிகரித்து வருவதன் காரணமாக ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. மேலும் தடுப்பூசி பணிகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினி கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
‘நீங்க சினிமால மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ தான்’ – சாலையோர மக்களுக்கு தினமும் உணவு வழங்கும் விஷால்!!
தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவுவதால் பாதுகாப்பு கருதி நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிலே வைத்து கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்தியுள்ளார். இதனை அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்தார். தற்போது அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.