கொரோனா இரண்டாம் அலை மிகவும் உக்கிரம் அடைந்து வரும் நிலையில் பலரும் சிகிச்சை பலனின்றி பலியாகின்றனர்.இதைத் தடுக்க அரசும் பலவித கட்டுப்பாடுகளை நடவடிக்கையும் எடுத்துக்கொண்டு வருகிறது.இந்நிலையில் அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமாக கட்டணம் வசூலித்த ஆம்புலன்ஸ் வேன் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
ரூ.15000 வசூலித்த ஆம்புலன்ஸ் உரிமையாளர்..
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
கொரோனா மிகவும் அதிகம் பரவி வருகின்றது நோயாளிகள் பலரும் மருத்துவமனையில் படுக்கை இல்லாமலும் ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லாமலும் தத்தளித்து வருகின்றனர்.இதில் பலர் ஆம்புலன்சில் இருந்தவாரே சிகிச்சையும் பெற்று வருகின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் பரலி என்னும் மாவட்டத்தில் நோயாளியானா முதியவர் ஒருவர் தன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் அவரது உடல்நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் அதே போல் இருந்துள்ளார்,எனவே அவரை இப்பொழுது இருக்கும் மருத்துவமனை விட அதிக நவீன வசதிகள் கொண்ட வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறலாம் என அவரது மகன் முடிவுசெய்தார்
இதனைத் தொடர்ந்து அவரை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ஒன்று அழைப்பு விடுத்துள்ளார் எந்த ஆம்புலன்சின் உரிமையாளர் அந்த முதியவரின் மகனிடம் ரூபாய் 15,000 கொடுத்தால் தான் வரமுடியும் என்று மிகவும் கண்டிப்பாக கேட்டுள்ளார்.அவரது மகனும் சரி என்று ஆம்புலன்சை வரவழைத்துள்ளார்.அந்த அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில் அவரது தந்தையை அனுமதித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார் இந்நிலையில் நம்மிடம் பணம் இருந்தது அதனால் கொடுத்துவிட்டோம் இதுவே இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்து இதற்கு ஒரு முடிவு வேண்டும் என அவர் அந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் மீது போலீசில் புகார் செய்தார் அதனை தொடர்ந்து உத்தரபிரதேச போலீசார் அந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளர்களை அழைத்து விசாரணை செய்த போது இது உண்மை என்று தெரியவந்தது.அதிக அளவிலான கட்டணத்தை வசூலிக்க காரணத்தினால் உரிமையாளரும் அவரது உதவியாளர்களும் கைது செய்து அவரது ஆம்புலன்ஸ் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.