இந்தியாவில் ஐபிஎல் தொடர் கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இன்று நடைபெற இருந்த கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது
கொல்கத்தா vs பெங்களூர்:
இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இந்தியாவில் 14வது ஐபிஎல் மெகா தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்த தொடர் முக்கியமா என்றும் கேள்வி எழுப்பி வந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் இன்று ஐபிஎல் தொடரின் 30 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பல பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில் தற்போது இந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மயூவை வீட்டில் பார்த்து ஷாக்காகும் கோபி – ராதிகாவிடம் சிக்குவாரா?? சூடுபிடிக்கும் ‘பாக்கியலட்சுமி’!!
காரணம் கொல்கத்தா அணியில் இடம் பிடித்திருந்த வருண் சக்கிறவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார் ஆகிய இருவருக்கும் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது இந்த போட்டி ஒத்திவைக்கப்பபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவலினால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.