புதுவையில் வெற்றி முத்திரையை பதித்த தேசிய ஜனநாயக கூட்டணி – மே 7ம் தேதி ரங்கசாமி பதவி ஏற்பு!!

0

புதுவையில் நேற்று நடந்த சட்டபேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையை பெற்றது. தற்போது புதுவையில் முதல்வர் பதவி ஏற்கும் தேதி குறித்த விவரம் வெளிவந்துள்ளது.

புதுவை சட்டப்பேரவை தேர்தல்:

புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. அங்கு மொத்தம் 30 சட்டப்பேரவை தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணியிட்டு போட்டியிட்டது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இந்த தேசிய கூட்டணி கட்சிகள் அதிகபட்சமாக 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக தற்போது புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதன்படி என்.ஆர்.காங்கிரஸ் 10, பாஜக 6 என மொத்தம் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது ஆட்சி அமைப்பது குறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பாஜக தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை சுமார் 1 மணி நேரமாக நடைபெற்றது.

‘முதல்வராக பதவி ஏற்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்’ – எடப்பாடி பழனிச்சாமி ட்வீட்!!

இந்த ஆலோசனையின் முடிவில் சபாநாயகர் பதவி மற்றும் 3 அமைச்சர்கள் பதவி என்.ஆர்.காங்கிரசிற்கும் மற்றும் பாஜக கட்சிக்கு 2 அமைச்சர்கள் பதவியையும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முதல்வர் பதவியை ரங்கசாமிக்கு ஒதுக்க அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். தற்போது புதுவை முதல்வராக ரங்கசாமி வருகிற மே மாதம் 7ம் தேதி பதவி ஏற்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here