தமிழ் திரையுலகில் பிரபல நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் ஆன குஷ்பூ நேற்று இரவு விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். இதையடுத்து இன்று பிற்பகல் 1 மணி அளவில் பாஜக., தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்களை சந்தித்து பாஜக.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக.,வில் இணக்கம்??
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர். அதிமுக.,வுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக இம்முறை அதிக இடங்களை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. இதனால் வருகின்ற தேர்தலில் மக்களிடையே பிரபலமானவர்களை கட்சியில் இணைத்துக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜக.,வில் இணைந்தார். அவர் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
மேலும் கட்சி பொறுப்பாளர்கள் பலர் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக.,விற்கு பலத்தை அதிகரிக்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ இன்று பாஜக., இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைமை மீது அவருக்கு ஏற்பட்ட அதிருப்தியே காரணமாக கூறப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களில் குஷ்பூ புறக்கணிக்கப்பட்டதாகவும், இதனால் இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Many see a change in me. Well as you age, you evolve n grow, learn n unlearn, perceptions change, likes n dislikes too, thoughts n ideas take a new shape, dreams are new, you understand the difference between like n love, between right n wrong. Change is inevitable. Happy eve ❤️ pic.twitter.com/on1B4bHx30
— KhushbuSundar ❤️ (@khushsundar) October 10, 2020
ஆனால் குஷ்பூ கட்சி மாற உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான போது, அதனை மறுக்கும் வகையில் அவர் பேட்டி அளித்தார். தற்போது டெல்லி சென்றுள்ள குஷ்பூ இன்று பிற்பகல் பாஜக., தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்களை சந்தித்து அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ‘மாற்றம் தவிர்க்க முடியாதது’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.