இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக கேரளா உள்ளது. மேலும் அங்கு நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதனால் அங்கு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. மதுபான கடைகளும் பூட்டப்பட்டு உள்ளதால் குடிமகன்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர்.
மதுபான பிரியர்களுக்கு சலுகை..!
கேரளாவில் மதுபான கடைகள் பூட்டப்பட்டு உள்ளதால் திருச்சூர் மாவட்டத்தில் மதுவிற்கு அடிமையான ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அங்கு அரங்கேறி உள்ளது. இதனால் மதுவிற்கு அடிமையானவர்களுக்கு என தனியாக ஒரு அறிவிப்பை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டு உள்ளார்.
அதன்படி மதுவிற்கு அடிமையாகி தற்போது மிகுந்த விரக்தியில் உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி மதுபானம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் தேவையானவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |