இரண்டாவது திருமணத்திலும் பிரச்சனையா?? அடக்கடவுளே.! குமுறும் அமலா பால் ரசிகர்கள்.!

0

தமிழில் முன்னணி நடிகையாக  வரும்  நடிகை அமலா பால் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து மைனா, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி என்பது உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென  ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீம்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார், அதில் தனது இரண்டாம் திருமணத்திலும் சிக்கல் இருப்பதுபோல் மீம்ஸ்களை பதிவிட்டு  வெளிப்படுத்தியுள்ளார்.

அமலா பால்

தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து குறுகிய காலத்தில் பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தினர். இயக்குநர் ஏஎல் விஜய்க்கும் அமலா பாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014ஆம் ஆண்டு இருவரும்  திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண  வாழ்க்கை மூன்று ஆண்டுகள் கூட முழுதாக நீடிக்கவில்லை. இருவருக்குள்ளும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது காரணமாக  2017ஆம் ஆண்டு இருவரும் சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்நிலையில் அமலாபால்  தான் ஒருவரை காதலித்து வருவதாக பேட்டிகளில் கூறி வந்தார். அமலா பால் தனது காதலருடன் லிவிங் டு கேதரில் இருப்பதாக பேசப்பட்டது. கடந்த சில  நாட்களுக்கு முன் அந்த சந்தேகத்தை போக்கும் வகையில் அமலா பால் தனது காதலரான பாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானது.

அமலா பால் பாவ்னிந்தர் சிங்குக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் புகைப்படங்களும்  வெளியானது. அந்த போட்டோக்களை அவரது இரண்டாம் கணவரான பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். பின்னர் உடனடியாக அவற்றை நீக்கினார். இதுவரை தனது இராண்டாம்  திருமணம் குறித்து அமலாபால் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அமலா பாலின் பேச்சை மீறி அவரது கணவர் போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மீம்ஸ்கள் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட இராண்டாம் திருமணமும்  பிரச்சனை என்ற பதிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த வயசுல இந்த ட்ரெஸ் தேவையா கிரண் ஆன்ட்டி – கலாய்க்கும் ரசிகர்கள்..!

இந்த செயலின் காரணமாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில மீம்ஸ்களை பதிவிட்டு அவர்களின் திருமண உறவு சுமூகமில்லாமல் இருப்பதாக என்பதை மறைமுகமாக சொல்லும் வகையில் உள்ளது.

முதல் பதிவு

முதல் மீமில் காதலர் “ஐ லவ் யூ” என்று கூறுவதாகவும் அதற்கு அந்த காதலி அதற்கு  என்ன என்று கேட்கிறார். உடனே காதலர் உன்னை நான் அதிகமாக காதலிக்கிறேன், நீ எனக்கு சொந்தமானவள் என்கிறார். அதற்கு காதலி இல்லை, யாரும் யாருக்கும் சொந்தமானவர்கள் இல்லை என்று கூறுகிற பொருளில் அமைகிறது.

இராண்டாம் பதிவு

இரண்டாம்  மீமில் காதல் ஜோடி பேசிக்கொள்வது போன்று உள்ளது. அதில் இருவரும் ஐ லவ் யூ என்று சொல்லிக் கொண்டோம். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் நான் பொய் சொல்லவில்லை என உள்ளது. இந்த மீம் மூலம், அமலா பால் தனது காதலரின் காதல் பொய்யானது என கூறுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதன்மூலம் தனது இரண்டாம் திருமணமும் சரியாக அமையவில்லை என்று கூறாமல் கூறியிருப்பதாக இருக்கிறது அந்த பதிவு.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here