தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் இப்போது தென்மேற்கு பருவமழை தீவிரமெடுத்து வருகிறது. குறிப்பாக கேரளா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதில் கேரள மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஆலப்புழா, எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதை தொடர்ந்து பத்தனம்திட்டா மாவட்டம் கோணி தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு தொடரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் நீர் வரத்து அதிகரித்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்…, உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!