அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தொடக்க பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட பல சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது. இதில், நடப்பு கல்வி ஆண்டுக்கான மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தற்போது விலையில்லா சைக்கிள்கள் விறுவிறுப்பாக வழங்கப்பட்டு வருகின்றன.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளத்தூர் பேரூராட்சியின் அருணாச்சலம் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் விலையில்லா சைக்கிள்களை வழங்கி உள்ளார். இதனை தொடர்ந்து, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியுள்ளார்.
தமிழக இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் திடீர் மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!!