நாட்டில் தீவிரமான குற்றம் புரிந்தவர்களுக்கு ஆயுள் தண்டனைகளை நீதிபதிகள் வழங்கி வருகின்றனர். இவ்வாறு சிறையில் ஆயுள் கைதியாக இருப்பவர்களின் ஒவ்வொரு நாட்களும் மிக கொடியது என கவிஞர் ஆஸ்கர் ஒய்ல்டின் உள்ளிட்ட பலரும் தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு சிறையில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகளில் 700 பேரை விடுவிக்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதற்கான உத்தரவுகளை பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில், இன்று வரை செயல்படுத்தாமல் இருப்பது மிகவும் வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். “முன் விடுதலை (premature release) வழங்குவது தண்டனையை ரத்து செய்வதில்லை. தண்டனையைக் குறைப்பது.” என உச்சநீதிமன்றமே அறிவுறுத்தி உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு தாமதிக்காமல் சிறைவாசிகளுக்கு கருணை காட்ட வேண்டும் என கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.