தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 19) மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதையொட்டி இன்று (ஏப்ரல் 17) முதல் ஏப்ரல் 19 வரை டாஸ்மாக் கடை, பார்கள் மூடி இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகள் மூடியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தி மற்றும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட இருப்பதாக சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இதன் காரணமாக இந்த இரு தினங்களிலும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், கிளப்பு பார்கள், ஓட்டல் பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
CSK vs LSG 2024: மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!