கோலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழையும் தாண்டி ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிரஞ்சீவி நடிப்பில் உருவான போலோ சங்கர் படத்தில் அவருக்கு தங்கச்சியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழில் அஜித் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான வேதாளம் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படம் வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் புரொமோஷன் பணிகளில் படக்குழு பிசியாக இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற புரொமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் சினிமாவில் கடந்து வந்த பாதைகளை குறித்து பேசியுள்ளார். அதில் ஆரம்பித்தில் பல ஹிட் படங்களை நான் கொடுத்து இருந்தாலும் ஒரு கட்டத்தில் பிளாப் நடிகை,ராசியில்லாத நடிகை என முத்திரை குத்த பட்டேன்.அது மிகவும் வேதனை அளித்தது. நான் நடித்தால், அந்த படம் பாதியிலேயே நின்றுவிடும் என்ற அளவுக்கு விமர்சனம் செய்தார்கள். அதையெல்லாம் தாண்டி தான் வந்துள்ளேன் என்று உருக்கமாக பேசினார்.
மூச்சு முட்டும் பேரழகை சிலுக்கு உடையில் மறைக்கும் கிரண்., ரசிக்க துடிக்கும் இளவட்டங்கள்!!