தமிழகத்தில் ஆடி, சித்திரை போன்ற நாட்களில் கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாதம் பிறந்ததில் இருந்து அனைத்து இடங்களில் கோவில் திருவிழாக்கள் களை கட்ட தொடங்கியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்படி வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை, வாவுபலி கொண்டாடப்பட உள்ளது. இதனால் அன்றைய நாளில் மக்கள் கூட்டம் அதிகம் கூடும் என்பதால் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 9 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களே.., இந்த பிரச்சனையால் திடீர் விடுமுறை.., அறிவிப்பை வெளியிட்ட உத்தரபிரதேச அரசு!!