இந்தியாவில் சிறு குறு தொழில் செய்வோருக்கும் அரசானது பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது. இதில் குறிப்பாக தமிழக அரசானது, பொங்கல் திருநாளுக்கு கைத்தறி நெசவாளர்களால் நெய்யப்பட்ட ஆடைகளை ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், இவர்களின் பொருளாதார நிலையும் முன்னேற்ற காணும் என்ற நோக்கத்துடனே அரசு வழி செய்துள்ளது. இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் பா.ஜ.க. மக்கள் சேவை மையம் சார்பாக தேசிய கைத்தறி தினம் எஸ்.என்.ஆர். கல்லூரி வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு, கலந்து கொண்டார். இதில், கைத்தறி நெசவாளர்களுக்கான நல வாரியம் உருவாக்கப்படும் என கூறிய இவர், ஆடை சுதந்திரம் குறித்தும் தெளிவுப்படுத்தி உள்ளார். அதாவது, மனிதர்களுக்கு 6 அறிவு உள்ளது. இதனால், ஆடை அணிவதற்கான எல்லை தெரியும். அதனை மீறினால் நமக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். எனவே சரியான முறையில் ஆடை சுதந்திரத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
நான் நடிச்சாலே அப்படி ஆகிடும்னு கேவலமா பேசுறாங்க.., கதறும் கீர்த்தி சுரேஷ்!!