பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது இனியா படிக்கும் காலேஜில் பாக்கியாவும் படித்து கொண்டிருக்கிறார். இதனால் கோபிக்கும் இனியாவிற்கும் கொஞ்சம் டென்ஷன் ஆக தான் செய்கிறது. அதுமட்டுமின்றி பாக்கியா ஒரு பக்கம் காலேஜ், இன்னொரு பக்கம் கேட்டரிங் என பிஸியாகவே இருந்து வருகிறார்.
தன்னை அவமானப்படுத்தி விட்டு சென்ற கோபி முன்பு வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தனையும் செய்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது சீரியல் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாக்கியா கதாபாத்திரத்தில் இனி கஸ்தூரி தான் நடிக்க போகிறாராம். இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் இது குறித்த தகவல் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.