லவ்வரோட ஓடிய காதலி.., காதலன் தாயை ஒட்டு துணியில்லாமல் இழுத்து சென்ற கொடூரர்கள்.., கர்நாடகாவில் நடந்த கொடூர சம்பவம்!!

0
கர்நாடகாவில் நடந்த கொடூர சம்பவம்
சமீபத்தில் மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவத்தில் இருந்தே மீள முடியாமல் இருந்து வரும் நிலையில், தற்போது அதே போல் ஒரு சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. அதாவது, கர்நாடக மாநிலம் பெலகாவி அருகில் இருக்கும் கிராமத்தில் அசோக்(24) என்ற இளைஞன், பிரியங்கா(18) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த சமயத்தில் பிரியங்கா வீட்டில் வேறு ஒரு பையனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று வந்த நிலையில், தனது காதலனுடன் ஊரை விட்டு ஓடியுள்ளார்.
இதை அறிந்த பெண்ணுடைய உறவினர்கள் காதலன் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அசோக்கின் தாயை அடித்து அவரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கம்பத்தில் கட்டி தாக்கியுள்ளனர்.இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்த கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்த நிலையில்,  அதிரடியாக ஏழு பேரை கைது செய்து அந்த தாயை மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்குவது எங்களின் முழுப் பொறுப்பு என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here